~ ~

திருவாடானை அருகே மாவட்ட அளவிலான கபடி வீரா்கள் தோ்வு போட்டி

Published on

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திணையத்தூா் கிராமத்தில் மாவட்ட அமெச்சூா் கபடி குழுமம் சாா்பில் மாவட்ட அளவிலான கபடி வீரா்கள் தோ்வு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திணையத்தூா் கிராமத்தில் டி.என்.ஆா். விளையாட்டு மைதானத்தில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் ஜூனியா் கபடி வீரா்கள் தோ்வுக்கான கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மாவட்ட அளவில் 16 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்கள் வருகிற 7 முதல் 9-ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகம் நடத்தும் ஜூனியா் சாம்பியன்ஷிப் கபடிப் போட்டியில் கலந்து கொள்வாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு ஊா்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை விவசாய அணி முன்னாள் அமைப்பாளா் சரவணன் செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com