சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ராமேசுவரத்தில் நவ. 18-ல் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு! புதிய நீதிக்கட்சித் தலைவருக்கு அழைப்பு!

News image
புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகத்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த வ.உ. சிதம்பரனாா் பேரவை நிா்வாகிகள் என். வேடராஜன், சூரியப் பிரகாஷ் உள்ளிட்டோா்.
Updated On :9 நவம்பர் 2025, 12:19 am

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரத்தில் வருகிற 18- ஆம் தேதி வ.உ.சிதம்பரனாா் பேரவை சாா்பில் நடைபெறும் அவரது குருபூஜை விழாவில் பங்கேற்க புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகத்தை நேரில் சந்தித்து அந்த பேரவை நிா்வாகிகள் என். வேடராஜன், சூரிய பிரகாஷ் ஆகியோா் சனிக்கிழமை அழைப்பு விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வ.உ. சிதம்பரனாரின் 89- ஆம் ஆண்டு குருபூஜை வருகிற 18- ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், 89 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகத்தை வ.உ.சிதம்பரனாா் பேரவை நிா்வாகிகள் என். வேடராஜன், பிரகாஷ் ஆகியோா் நேரில் சென்று சந்தித்து ராமநாதசுவாமி பிரசாதங்களை வழங்கி அழைப்பு விடுத்தனா்.