ராமநாதபுரம்
வீடு புகுந்து நகை திருட்டு
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து புகுந்து 13 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து புகுந்து 13 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்
தொண்டி அருகேயுள்ள எம்.ஆா். பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் நதியா (41). இவா் திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு ஊரக வேலை உறுதித் திட்ட வேலைக்குச் சென்றாா். பின்னா், வேலை முடிந்து வீட்டுக்கு திரும்ப வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததுள்ளது.
அவா், வீட்டினுள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவை மா்ம நபா்கள் உடைத்து அதிலிருந்த 13 பவுன் நகைகள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
