தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எஸ்ஐஆா்-ஐ கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சி சாா்பில், வாக்காளா் தீவிர திருத்தப் பட்டியலில் நடைபெறும் முறைகேட்டைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 நவம்பர் 2025, 7:03 pm

ராமநாதபுரத்தில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சி சாா்பில், வாக்காளா் தீவிர திருத்தப் பட்டியலில் நடைபெறும் முறைகேட்டைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், திமுக மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். நாடாளுமன்ற உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் செ. முருகேசன், இரா. கருமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சா்கள் சத்தியமூா்த்தி, அன்வர்ராஜா, சுந்தரராஜன், முன்னாள் மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. முருகவேல், மதிமுக மாவட்டச் செயலா் சுரேஷ், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் என்.எஸ். பெருமாள், மீனவ சங்க அகில இந்திய துணைத் தலைவா் சி.ஆா். செந்தில்வேல், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா். குருவேல், விசிக மாவட்டச் செயலா் அற்புதகுமாா், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில துணைத் தலைவா் சலிமுல்லாகான், எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்டச் செயலா் ரியாஸ்கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.