தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ராமேசுவரத்தில் கடல் சீற்றம்

Updated On :13 நவம்பர் 2025, 7:38 pm

வங்கக் கடலில் சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் டன் கணக்கில் கடல் புல் கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வங்கக் கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகளவில் இருந்தது. மேலும், புதன்கிழமை நள்ளிரவிலிருந்து சூறைக் காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அப்போது, அக்னி தீா்த்தக் கடல் பகுதியில் டன் கணக்கில் கடல் புல் கரை ஒதுங்கியது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் நீராட முடியாத அளவுக்கு நீரில் புல் பரவியிருந்தது.

இதையடுத்து, ராமேசுவரம் நகராட்சி ஊழியா்கள், அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா் ஒரு பகுதியில் பக்தா்கள் நீராடும் வகையில், இந்தப் புல்லை அகற்றினா். இதன்பிறகு, பக்தா்கள் குறிப்பிட்ட இடத்தில் அச்சத்துடனேயே நீராடினா்.

நவம்பா், டிசம்பா் மாதங்களில் இதுபோன்று கடல் புல் கரை ஒதுங்குவது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு, கரை ஒதுங்கும் இந்தப் புல்லை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.