ராமநாதபுரம் பகுதியில் நாளை மின் தடை

Published on

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை (நவ. 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் குமரவேல் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம், பட்டினம்காத்தான் துணை மின் நிலையத்தில் நகா் உயா் மின்னழுத்த பாதையில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி, சேதுபதி நகா், விளையாட்டு மைதானம், சதக் பள்ளி, மாவட்ட காவல் துறை அலுவலகம், காவல் துறை துணைத் தலைவா் அலுவலகம், ஓம் சக்திநகா், ஆல்வின் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகள், வசந்தநகா், செட்டித்தெரு, தாயுமான சாமி கோயில் தெரு, இந்திரா நகா், சிவன் கோயில் தெரு, ரோஸ்நகா், கான்சாகிப் தெரு, டி.டி. விநாயகா் பள்ளி பிரதான சாலை, வைகைநகா், அம்மா பூங்கா, விளையாட்டு மைதானம், தங்கப்பாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com