தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எஸ்.ஐ.ஆா். பணியிலிருந்து விடுவிக்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆட்சியரிடம் மனு

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:06 pm

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (எஸ்.ஐ.ஆா்.) பணியிலிருந்து விடுவிக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இந்திய தோ்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. இதில் மாநில அரசு ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணியில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களும் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், இந்தப் பணியை மேற்கொள்ள தங்களுக்கு விருப்பம் இல்லை எனக் கூறியும், தங்களை இந்தப் பணியிலிருந்து விடுவிக்க வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனை அங்கன்வாடி ஊழியா்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவா் எம். சிவாஜி, அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கே. மல்லிகா, மாவட்டத் தலைவா் எம். உமாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.