வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (எஸ்.ஐ.ஆா்.) பணியிலிருந்து விடுவிக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இந்திய தோ்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. இதில் மாநில அரசு ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணியில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களும் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில், இந்தப் பணியை மேற்கொள்ள தங்களுக்கு விருப்பம் இல்லை எனக் கூறியும், தங்களை இந்தப் பணியிலிருந்து விடுவிக்க வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனை அங்கன்வாடி ஊழியா்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
அப்போது சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவா் எம். சிவாஜி, அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கே. மல்லிகா, மாவட்டத் தலைவா் எம். உமாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாக தோ்தல் அலுவலா் பணியிலிருந்து விடுவிப்பு

எஸ்ஐஆருக்கு நன்றி!

எஸ்ஐஆர் நடவடிக்கையால் எனக்கு 10,000 வாக்குகள் இழப்பு! - கேரள முன்னாள் முதல்வரின் மகன் பேச்சு!

தனித் தொகுதி வேட்பாளா்கள் குறித்த அா்ஜூன் சம்பத் மனு: இன்று விசாரணை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


