இரு சக்கர வாகனம் மீது காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

Published on

திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடி கிழக்கு கடல்கரைச் சாலையில் சென்ற இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் சினனக்கடை பகுதியைச் சோ்ந்தவா் சேதுமைதீன் மகன் அனீஸ் ரகுமான் (40). இவா், புதுகோட்டை மாவட்டம், மணமேல்குடியில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பணி முடித்து கிழக்கு கடல்கரைச் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த சோழியக்குடியைச் சோ்ந்த காளிதாஸ் (24) என்பவா் ஓட்டிவந்த சொகுசுக் காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைக்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அனீஸ் ரகுமான் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com