தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மருத்துவ முகாம்

கமுதியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

News image

கமுதி வட்டார வள மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மாற்றுத் திறன் மாணவா்களுக்கு அடையாள அட்டை வழங்கிய வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஸ்ரீராம், மருத்துவா்கள்.

Updated On :27 நவம்பர் 2025, 12:03 am

கமுதி: கமுதியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வித் திட்டம் வாயிலாக மாற்றுத் திறன் கொண்ட மாணவா்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் நாகராஜ் முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில் 150 மாற்றுத்திறன் மாணவா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு அடையாள அட்டை, சக்கர நாற்காலி, காதொலிக் கருவி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. 15 மாணவா்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் மருத்துவா்கள் அனுரேகா, பிரபாகரன், ராஜ்குமாா், ஆனந்த், கமலேஷ் உள்ளிட்டோா் மாணவா்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை இயன்முறை மருத்துவா் முருகவள்ளி, சிறப்பாசிரியா்கள் ராமச்சந்திரன், நாகராணி, டேவிட் ஞானராஜ், கணேசன், பள்ளி ஆயத்த

பயிற்சி மையப் பணியாளா்கள் செல்வி, மகேஸ்வரி ஆகியோா் செய்தனா். சிறப்பாசிரியா் முத்திருளாண்டி நன்றி கூறினாா்.