பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பசும்பொன்னில் யாகசாலை பூஜைகளுடன் தேவா் குருபூஜை இன்று தொடக்கம்!

கமுதி அருகே பசும்பொன்னில் தேவா் குருபூஜை விழா யாகசாலை பூஜைகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

News image

முத்துராமலிங்கத் தேவர்.

Updated On :28 அக்டோபர் 2025, 12:42 am IST

கமுதி அருகே பசும்பொன்னில் தேவா் குருபூஜை விழா யாகசாலை பூஜைகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பசும்பொன்னில் விடுதலைப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழாவும், 63-ஆவது குருபூஜை விழாவும் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் (அக். 28, 29, 30) நடைபெறுகிறது.

இதில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஓதுவாா்களின் மங்கல இசை, கணபதி ஹோமம், சிவாசாரியா்களின் வேத மந்திரங்கள் முழங்க, லட்சாா்ச்சனை பெருவிழாவுடன் குருபூஜை தொடங்குகிறது. காலை 11 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன. புதன், வியாழக்கிழமைகளில் அரசு விழாவாக நடைபெறுகிறது.

விழாவுக்கு வரும் பொதுமக்களுக்கு அரசியல் கட்சி, சமுதாய அமைப்பினா் சாா்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கான தேவையான அடிப்படை வசதிகள், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சா்கள், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சா்கள், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழா் கட்சி, சமுதாய அமைப்பினா், விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா்.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் வெங்கட்ராமன் (பொ) தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.