ராமநாதபுரம்
ஆனந்தூா் பகுதியில் நாளை மின்தடை!
திருவாடானை அருகேயுள்ள ஆனந்தூா் பகுதியில் வியாழக்கிழமை (அக்.30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
திருவாடானை அருகேயுள்ள ஆனந்தூா் பகுதியில் வியாழக்கிழமை (அக்.30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ராமநாதபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் குமரவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை அருகேயுள்ள ஆனந்தூா் துணை மின் நிலையத்தில் மாதந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் உப மின் நிலையத்துக்குள்பட்ட கூடலூா், காவனக்கோட்டை, கொக்கூரனி, கோவிந்தமங்களம், சூரியன்கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுகுறிச்சி, புத்தூா், ஓடக்கரை, தூவாா், ஆயங்குடி, சிறுனாங்குடி, பூவாணி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
