அக்னி தீா்த்தக் கடல்கரையில் கரை ஒதுங்கிய ஆண் சடலம் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல்கரையில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை கடலோரப் பாதுகாப்புக் குழுமப் போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல்கரையில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை கடலோரப் பாதுகாப்புக் குழுமப் போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் புதன்கிழமை 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பது குறித்து பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு சென்றனா்.

இதைத் தொடா்ந்து, இறந்தவா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com