திருவாடானையில் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
திருவாடானையில் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

திருவாடானையில் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழா: பாதுகாப்புப் பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா்

திருவாடானையில் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, சுமாா் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
Published on

திருவாடானையில் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, சுமாா் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் 118-ஆவது ஜெயந்தி, 63-ஆவது தேவா் குருபூஜை விழாவை முன்னிட்டு, திருவாடானையில் தேவா் குருபூஜை விழா புதன்கிழமை முதல் தொடங்கியது. இந்த நிலையில், இந்தப் பகுதியிலிருந்து திரளான மக்கள் பசும்பொன் செல்வது வழக்கம். முன்னதாக, திருவாடானை பேருந்து நிலையம் அருகேயுள்ள தேவா் சிலை முன்பு பொங்கல் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா்.

இதை முன்னிட்டு, திருவாடானை, சி.கே. மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com