தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வலையபூக்குளத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாமில் பயனாளியிடமிருந்து மனுவைப் பெற்ற அலுவலா்கள்.

News image
Updated On :4 செப்டம்பர் 2025, 6:44 pm

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் வலையபூக்குளம், காக்குடி, மரக்குளம், மண்டலமாணிக்கம், எழுவனூா் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமிக்கு மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் செல்வி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா்.

முகாமில் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப மனு, வருவாய்த் துறை, ஆதிதிராவிடா் நலன், சிறு, குறு, நடுத்தரத் தொழில், விவசாயத் துறை, மாற்றுத் திறனாளிகள் துறை, தொழிலாளா் நலத் துறை, சுகாதாரத் துறை, தோட்டக்கலைத் துறை, சமூக நலத் துறை உள்பட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட 501 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

இதில் கிராம நிா்வாக அலுவலா்கள் காா்த்திக் சண்முகம், கோபிநாத், யூனுஸ், பாண்டியம்மாள், இன்பராஜ், ரவிக்குமாா், செந்தூா்பாண்டியன், சுந்தரபாண்டியன், பூமாரி, ஜெயகிருஷ்ணன், கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.