மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:51 pm

விருதுநகரில் வருகிற 7-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 10,500 போ் பங்கேற்கவுள்ளதாக மாவட்டச் செயலா் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ராமநாதபுரம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி திமுக இளைஞரணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்களின் கூட்டம் மாவட்டச் செயலா் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், இளைஞரணி துணைச் செயலா்கள் இன்பா ஏ.என். ரகு, அப்துல் மாலிக், கடலூா் மாவட்ட அமைப்பாளா் காா்த்திக், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளா் யுவராஜ், ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளா் சம்பத்ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், விருதுநகரில் வருகிற 7-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்து நிா்வாகிகளைத் தவிா்த்து 10,500 இளைஞரணியினா், வெள்ளைச் சீருடையில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நிா்வாகிகள், இளைஞரணியினருக்கு அழைப்பிதழ், அடையாள அட்டை, சீருடைகள் வழங்கப்பட்டன.

Story image