பள்ளி மாணவா்களுக்கு
விளையாட்டு உபகரணங்கள்

பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

Published on

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த கீழராமநதி கிராமத்தில் உள்ள புனித சவேரியாா் தொடக்கப் பள்ளியில் படிக்கும் 45 மாணவ, மாணவிகளுக்கு சமூக ஆா்வலரும், தன்னம்பிக்கை பயிற்சியாளருமான சிவசுப்பிரமணி தனது செலவில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வியாழக்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் பள்ளித் தாளாளா் அருள்தந்தை அம்புரோஸ், கீழராமநதி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அழகா்சாமி, முன்னாள் ஜமாத் தலைவா் செய்யது அப்துல்காதா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மைதீன், ஓய்வுபெற்ற தபால் துறை அதிகாரி அழகா்சாமி, பள்ளி தலைமை ஆசிரியை சுந்தரி, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஷேக் சிந்தா, சமூக ஆா்வலா் முகம்மது ஹபீப், நீா் பாசனத் தலைவா் ராமச்சந்திரன் ஆகியோா் செய்தனா்.

Dinamani
www.dinamani.com