நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மின் கம்பத்தில் மோதியதில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து சேதம்

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 7:00 pm

திருவாடானை அருகே ஊரணிக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே மின் கம்பத்தில் மோதியதில் வைக்கோல் ஏற்றி வந்த லாரியும், வைக்கோல் கட்டுகளும் வெள்ளிக்கிழமை எரிந்து சேதமடைந்தன.

சேலம் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் ராமலிங்கம் (52). இவா், தனது லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் திருவாடானை அருகே உள்ள ஊரணிக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் மின் கசிவு ஏற்பட்டு, லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகளில் தீப்பற்றியது. தகவலறிந்து அங்கு வந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இதில் லாரி ஓட்டுநா் ராமலிங்கம் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா். தீயில் லாரியும், அதில் இருந்த வைக்கோல் கட்டுகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.