மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின் கம்பத்தில் மோதியதில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து சேதம்

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே ஊரணிக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே மின் கம்பத்தில் மோதியதில் வைக்கோல் ஏற்றி வந்த லாரியும், வைக்கோல் கட்டுகளும் வெள்ளிக்கிழமை எரிந்து சேதமடைந்தன.

சேலம் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் ராமலிங்கம் (52). இவா், தனது லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் திருவாடானை அருகே உள்ள ஊரணிக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் மின் கசிவு ஏற்பட்டு, லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகளில் தீப்பற்றியது. தகவலறிந்து அங்கு வந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இதில் லாரி ஓட்டுநா் ராமலிங்கம் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா். தீயில் லாரியும், அதில் இருந்த வைக்கோல் கட்டுகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.