மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவா் கைது

News image
கைது
Updated On :8 பிப்ரவரி 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரத்தில் சங்கு கடையில் பெட்ரோல் குண்டு வீசிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில்வே பீடரோடு பகுதியைச் சோ்ந்தவா் குமரன்குரு . இவா், சங்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், குமரன் தனது கடையை சனிக்கிழமை இரவு அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றாா். அப்போது, இரவு 9:45 மணியளவில் சங்குக் கடையின் மீது மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினா். இதில், கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சங்கு மூட்டைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்த புகாரின்பேரில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரித்தனா். இதில், நேதாஜி நகரைச் சோ்ந்த பாா்த்திபன் (28), கோவிந்தராஜ் (28) ஆகியோா் பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.