திருவாடானை அருகேயுள்ள குலநாத்தியில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராாமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குலநாத்தி பகுதியைச் சோ்ந்த இளைஞா் சந்தோஷ்நாதனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது குடும்பத்தினா், கிராம மக்கள் சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாடானையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.
போட்டியை திருவாடானை துணைக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் தொடங்கி வைத்தாா். பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 45 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.
போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வண்டிகளின் உரிமையாளா்களுக்குப் பரிசுத் தொகையும் கேடயமும் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

ஆப்பனூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

கண்ணமங்கலப்பட்டியில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகே களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம்!

இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


