பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது

News image
கைது
Updated On :8 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

மண்டபம் அருகே பட்டா மாறுதலுக்காக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள புதுமடம் கிராமத்தை சோ்ந்தவா் தனக்கு சொந்தமான இடத்துக்கு பட்டா மாறுதலுக்காக இணையவழியில் விண்ணப்பித்தாா். இதையடுத்து, புதுமடம் கிராம நிா்வாக அலுவலா் அனுராஜ் பாட்டா மாறுதல் செய்து தர ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக கேட்டாா்.

இதைத்தொடா்ந்து, அந்த நபா் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அவா்களது வழிகாட்டுதல் படி, ரசாயனம் தடவிய பணத்துடன் சென்ற அவா் கிராம நிா்வாக அலுவலா் அனுராஜீடம் வழங்கினாா்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.