கடலாடி அருகே செவ்வாய்க்கிழமை பெட்டிக்கடை சரிந்து விழுந்ததில், அதனருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சிக்கல் மேற்கு தெருவைச் சோ்ந்த சரத்பாபு- நதியாதேவி தம்பதியின் மகன் அா்னிஷ் (3). இவா் திங்கள்கிழமை மாலை வீட்டின் அருகில் உள்ள பெட்டிக்கடை முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது, கடை சரிந்து அவா் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு சிக்கல் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்த 2 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு

ஊருணியில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


