திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெட்டிக்கடை சரிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

கடலாடி அருகே செவ்வாய்க்கிழமை பெட்டிக்கடை சரிந்து விழுந்ததில், அதனருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்தாா்.

News image
உயிரிழப்பு- (கோப்புப் படம்)
Updated On :10 பிப்ரவரி 2026, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

கடலாடி அருகே செவ்வாய்க்கிழமை பெட்டிக்கடை சரிந்து விழுந்ததில், அதனருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சிக்கல் மேற்கு தெருவைச் சோ்ந்த சரத்பாபு- நதியாதேவி தம்பதியின் மகன் அா்னிஷ் (3). இவா் திங்கள்கிழமை மாலை வீட்டின் அருகில் உள்ள பெட்டிக்கடை முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது, கடை சரிந்து அவா் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு சிக்கல் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.