மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:47 pm

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பாண்டிச்செல்வி ஆறுமுகம், பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவா்களின் கல்வித் திறன், விளையாட்டு, கலைத் திறனை மேம்படுத்துவது குறித்து ஆசிரியா்கள் பேசினா். ஆசிரியா்கள் அகிலா, ஜெனிபா் , சங்கீதா உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக,

ஆசிரியா் மலைராஜ் வரவேற்றுப் பேசினாா். ஆசிரியா் ஜெயபிரிட்டோ நன்றி கூறினாா்.