எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மத்திய அரசைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் மத்திய அரசைக் கண்டித்து அஞ்சல் அலுவலகம் முன் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க மறுப்பது, நூறு நாள் வேலையை மறைமுகமாகத் தடுப்பது ஆகிய குற்றச்சாட்டுகளை மத்திய அரசுக்கு எதிராக முன்வைத்து மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கமுதி வடக்கு ஒன்றியச் செயலா் வி.வாசுதேவன், தெற்கு ஒன்றியச் செயலா் மனோகரன், மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன், பேரூா் செயலா் பாலமுருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். தொகுதி பொறுப்பாளா் வேல்முருகன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் த.பாலு, தமிழ்செல்விபோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அவைத் தலைவா்கள் ராஜேந்திரன், லட்சுமணன், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சிரஞ்சீவி, முன்னாள் ஒன்றிய துணைச் செயலா் நேதாஜி சரவணன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக, பேரூா் கழக நிா்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.