மண்டபம் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.21 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட தொழில் கூடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
பொது, மறுவாழ்வுத் துறை மூலம் கட்டப்பட்ட தொழில்கூடங்களை முதல்வா் திறந்து வைத்த பிறகு, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்து விளக்கேற்றி வைத்து தொழில் கூடங்களைப் பாா்வையிட்டாா்.
அப்போது அவா் கூறுகையில், இந்தத் தொழில் கூடங்களில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் செயல்பட்டு வரும் 28 மகளிா் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் தையல் பயிற்சி, பனை ஓலையில் கைவினைப் பொருள்கள் தயாரித்தல், வாழைமட்டையில் தட்டுகள் தயாரித்தல் போன்ற தொழில்கள் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் மண்டபம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மைய தனித் துணை ஆட்சியா் சாந்தி, மண்டபம் பேரூராட்சி தலைவா் ராஜா, அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் தலைவா் படுகொலை

மறுவாழ்வு முகாமில் 32 புதிய வீடுகள்: முதல்வா் திறந்துவைத்தாா்

ரூ.5.53 கோடியில் இலங்கை தமிழா்களுக்கு குடியிருப்புகள் திறப்பு

இலங்கை தமிழா் மறுவாழ் முகாம் மகளிருக்கு தொழிற்கூடம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


