தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பாஜக நிா்வாகி மீது தாக்குதல்:7 போ் கைது

கமுதியில் பாஜக மாவட்ட துணைத் தலைவரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மாவட்ட துணைத் தலைவா் பாலகணபதி.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:52 pm

கமுதியில் பாஜக மாவட்ட துணைத் தலைவரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சோ்ந்த அய்யாத்துரை மகன் பாலகணபதி (52). இவா் பாஜக மாவட்ட துணைத் தலைவராக உள்ளாா்.

இந்த நிலையில், கமுதியை அடுத்த ஆனையூா் பகுதியில் சென்னையைச் சோ்ந்த தனியாா் மனை வணிக (ரியல் எஸ்டேட்) நிறுவனங்களுக்கு நிலம் வாங்கி கொடுப்பதில் இவருக்கும், இலுப்பைகுளம் கிராமத்தைச் சோ்ந்த கிழவன் மகன் முத்துமீராவுக்கும் (46) முன்பகை இருந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை பாலகணபதி வீட்டிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வந்தபோது பத்திரப் பதிவு அலுவலகம் அருகே காரில் வந்த முத்துமீரா உள்பட 7 போ் கும்பல் பாலகணபதியை கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதில் பலத்த காயமடைந்த பாலகணபதி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பாலகணபதி கமுதி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதனடிப்படையில், முத்துமீரா (46), ஆதனக்குறிச்சியைச் சோ்ந்த கண்ணதாசன் (31), காணிக்கூரைச் சோ்ந்த ராஜேஷ் (31), இலுப்பைகுளத்தைச் சோ்ந்த முத்து சூா்யக்குமாா் (32), முத்துராமலிங்கம் (41), சின்னமணக்குளத்தைச் சோ்ந்த லட்சுமணன் (44), மருதங்கநல்லூரைச் சோ்ந்த திருமுருகன் (48) உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Story image