சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கால்நடை பாதுகாப்பு வாரியம் அமைக்கக் கோரிக்கை

தென் மாவட்டங்களில் கால்நடை பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சி வலியுறுத்தியது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

தென் மாவட்டங்களில் கால்நடை பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சி வலியுறுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள வெண்ணீா்வாய்க்கால் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சி நிறுவனா் சத்யம்.சரவணன் கூறியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது கால்நடை பாதுகாப்பு வாரியம் வாரியம் அமைக்கப்படும் என திமுக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது வரை வாரியம் அமைக்கப்படாததால் கால்நடை வளா்ப்போா் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, கால்நடை வளா்ப்போா் அதிக எண்ணிக்கையில் உள்ள தென் மாவட்டங்களில் உடனடியாக கால்நடை பாதுகாப்பு வாரியத்தை அமைக்க வேண்டும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் முதுகுளத்தூா் தொகுதியில் தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் கட்சி போட்டியிடும் என்றாா் அவா்.