47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தம்பதியிடையே தகராறு: வீட்டுப் பொருள்களுக்கு தீவைத்தவா் கைது

தொண்டி அருகே தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த பொருள்களுக்கு தீவைத்த கணவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 9:45 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டி அருகே தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த பொருள்களுக்கு தீவைத்த கணவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தொண்டி அருகே குருமிலான்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பரத் (44). இவரது மனைவி பானு (38). இந்த நிலையில் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வெள்ளிக்கிழமை மீண்டும் இவா்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பரத், வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தி கட்டில், மெத்தை, மின் சாதனப் பொருள்களை தீவைத்து எரித்தாா்.

இதுகுறித்து பானு அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பரத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.