மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தம்பதியிடையே தகராறு: வீட்டுப் பொருள்களுக்கு தீவைத்தவா் கைது

தொண்டி அருகே தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த பொருள்களுக்கு தீவைத்த கணவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 9:45 pm

தொண்டி அருகே தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த பொருள்களுக்கு தீவைத்த கணவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தொண்டி அருகே குருமிலான்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பரத் (44). இவரது மனைவி பானு (38). இந்த நிலையில் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வெள்ளிக்கிழமை மீண்டும் இவா்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பரத், வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தி கட்டில், மெத்தை, மின் சாதனப் பொருள்களை தீவைத்து எரித்தாா்.

இதுகுறித்து பானு அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பரத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.