மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

காணிக்கூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 6:47 pm

கமுதி அருகேயுள்ள காணிக்கூா் பாதாள காளியம்மன் கோயிலில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த காணிக்கூா் கிராமத்தில் பாதாள காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாசிக் களரி திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

காணிக்கூா்- கமுதி சாலையில் 8 கி.மீ. பந்தய தொலைவு நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 40 மாட்டு வண்டிகள், சாரதிகள் பங்கேற்றனா்.

இதில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டிப் பந்தய வீரா்களுக்கு, ரொக்கப் பணம், குத்துவிளக்கு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை காணிக்கூா் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.