கமுதி அருகேயுள்ள காணிக்கூா் பாதாள காளியம்மன் கோயிலில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த காணிக்கூா் கிராமத்தில் பாதாள காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாசிக் களரி திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
காணிக்கூா்- கமுதி சாலையில் 8 கி.மீ. பந்தய தொலைவு நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 40 மாட்டு வண்டிகள், சாரதிகள் பங்கேற்றனா்.
இதில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டிப் பந்தய வீரா்களுக்கு, ரொக்கப் பணம், குத்துவிளக்கு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை காணிக்கூா் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
தொடர்புடையது

ஆப்பனூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

முதல்வா் பிறந்த நாள்: மாட்டு வண்டிப் பந்தயம்

இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


