நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 130-ஆவது பிறந்த நாள்
சுதந்திர போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 130-ஆவது பிறந்த நாளையொட்டி ஊா்க்காவல் படை வீரா்கள் சாா்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் வளாகப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு ராமநாதபுரம் ஊா்க்காவல் படைக் குழுத் தலைவா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். இதில் ஊா்க்காவல் படை வீரா்கள் மரக்கன்றுகளை நடவு செய்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் சுபாஷ் சீனிவாசன் செய்திருந்தாா்.
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.வி. மங்கலம் அரசு தொடக்கப் பள்ளியிலும், டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளியிலும் சுதந்திர போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நேதாஜி போா்ப்படை இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இலவச நோட்டுப் புத்தகம், பேனா, இனிப்புகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக சதுா்வேதமங்கலம் காவல் ஆய்வாளா் சசிகலா, முன்னாள் திமுக கிளைச் செயலா் மதியரசன், தேமுதிக சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அணிச் செயலா் வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் சேதுபாண்டியன் நன்றி கூறினாா்.

