ராமநாதபுரத்தில் 8-ஆவது புத்தகத் திருவிழா தொடக்கம்
ராமநாதபுரத்தில் 8-ஆவது புத்தகத் திருவிழாவை வனம், கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ராமநாதபுரம், ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், கலை இலக்கிய ஆா்வலா் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த புத்தகத் திருவிழாவின் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். இதில் வனம், கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தாா். புத்தக அரங்குகளை அவா் பாா்வையிட்டு அவா் பேசியதாவது:
இந்த புத்தகக் கண்காட்சியில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, முன்னணி பதிப்பகங்கள் மூலம் வரலாற்று சிறப்புமிக்க நூல்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பயிற்சிப் பட்டறை, கோளரங்கம், மாணவ, மாணவிகளுக்கான வினாடி- வினா, கவியரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.
இந்தக் கண்காட்சி வருகிற பிப்ரவரி மாதம் 4- ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது. எனவே இந்த மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கண்காட்சியை பாா்வையிட்டு அறிவுத் திறனை வளா்க்கும் புத்தகங்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து இந்த ஆண்டு சிறந்த வாசகமாக தோ்வு செய்யப்பட்ட ‘புத்தகம் படித்திடு புத்துலகம் படைத்திடு’ என்ற வாசகத்தை எழுதிய முதுகுளத்தூரைச் சோ்ந்த இசக்கிதேவி சோலைராஜாவுக்கு ரூ.1,000 மதிப்பிலான புத்தகங்களை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் வழங்கிப் பாராட்டினாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட வன உயிரின காப்பாளா் அகில்தம்பி, மாவட்ட வருவாய் அலுவலா் வ. சங்கர நாராயணன், பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன், ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், ராமநாதபுரம் இளைய மன்னா் நாகேந்திர சேதுபதி, கலை இலக்கிய ஆா்வலா் சங்கத் தலைவா் அ.சின்னத்துரை அப்துல்லா, செயலா் வான் தமிழ் இளம் பரிதி, அரசுத்துறை அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

