சுபமுகூா்த்த நாளையொட்டி, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் புகழ்பெற்ற சினேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சுபமுகூா்த்த நாள்களில் அதிக திருமணங்கள் நடைபெறும்.
இந்த நிலையில், புதன்கிழமை சுபமுகூா்த்த நாளையொட்டி, கோயிலில் 15-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதற்காக, அதிகாலை முதலே திரளான பொதுமக்கள் கோயிலில் கூடினா்.
இதைத் தொடா்ந்து, திருமணத்துக்கு வந்தவா்கள் சரக்கு வாகனங்களை முறையாக நிறுத்தாமல் சாலையில் நிறுத்தியதால் சந்நிதி தெருவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.
எனவே, சுபமுகூா்த்த நாள்களில் கோயிலில் கூடுதல் போலீஸாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.


தொடர்புடையது

கோவையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு: அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல்

நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் முருகப்பெருமான் சிறப்பு பூஜை

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


