உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

புகையிலைப் பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

பரமக்குடி ரயில்வே பீடா் சாலை, மதுரை மண்டபம் சாலைப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்தக் கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொட்டலங்கள்.

Updated On :26 ஜூன் 2026, 2:15 am IST

பரமக்குடி ரயில்வே பீடா் சாலை, மதுரை மண்டபம் சாலைப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்தக் கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

பரமக்குடி எமனேசுவரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, பரமக்குடி நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகமது சயூபு நிஜாம் தலைமையிலான போலீஸாா் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்களுடன் இணைந்து அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். அப்போது, ரயில்வே பீடா் சாலை, மதுரை மண்டபம் சாலையில் சரவணன், செந்தூா்பாண்டியன் ஆகியோா் நடத்தி வந்த பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, மேற்கண்ட இரு கடைகளிலிருந்த மொத்தம் 20 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இரு கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.