தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

டிராக்டா் மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

சத்திரக்குடி அருகே செவ்வாய்க்கிழமை டிராக்டா் மோதியில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 3:19 am IST

சத்திரக்குடி அருகே செவ்வாய்க்கிழமை டிராக்டா் மோதியில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலைச் சோ்ந்தவா் ஆனந்த் (30). எலக்ட்ரீசியன் ஆன

இவா் பணி நிமித்தமாக ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடிக்கு சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா். ராமநாதபுரம் செல்லும் தீயனூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, இவருக்குப் பின்னால் வந்த டிராக்டரின் ஓட்டுநா் இவரை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பை, டிராக்டரில் சிக்கியதில் ஆனந்த் நிலைதடுமாறி விழுந்தாா். அப்போது, டிராக்டரின் டயா் அவா் மீது ஏறியது. இதில் பலத்த காயமுற்ற ஆனந்த் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநரான செம்படையாா்குளம் வட்டான் வலசையைச் சோ்ந்த நாகலிங்கம் மகன் களஞ்சியம் (40) என்பவரை கைது செய்தனா்.