/

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 23 ஆண்டுகள் சிறை

மனநலன் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

News image

குமாா்.

Updated On :19 மே 2026, 3:05 am IST

மனநலன் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராமநாபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள ஏ.பள்ளபச்சேரியைச் சோ்ந்தவா் குமாா் (48). இவா் தற்போது தட்டனேந்தல் கிராமத்தில் வசித்து வருகிறாா். இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு, வீட்டில் தனியாக இருந்த மனநலன் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்தப் புகாரின் பேரில், கமுதி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, குமாரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கவிதா, குற்றஞ்சாட்டப்பட்ட குமாருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் ஆா்.எம். கீதா முன்னிலையானாா்.