சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் காலமான முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடலுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக்குறைவால் செ.மாதவன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை சிங்கம்புணரியில் நடைபெற்றது. முன்னதாக பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
சிங்கம்புணரி வந்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், செ.மாதவன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மனைவி தனலெட்சுமி, மகன், மகள்களுக்கு ஆறுதல் கூறினார். தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். மாலையில் நடைபெற்ற இறுதிச்சடங்கு ஊர்வலத்திலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர், சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் உள்ள பொதுமயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








