சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

"கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை ஒரே தவணையில் வழங்க உத்தரவு'

அஞ்சல் துறையில் பணியாற்றும் கிராமப்புற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் வழங்க அஞ்சல்துறை உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :9 ஜூலை 2018, 1:31 am

DIN

அஞ்சல் துறையில் பணியாற்றும் கிராமப்புற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் வழங்க அஞ்சல்துறை உத்தரவிட்டுள்ளது. 
கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்க மாநில உதவித்தலைவர் செல்வன் மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை கூறியது: நாடு முழுவதும் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள், ஊதிய உயர்வு, கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர்.  தொடர்ந்து 16 நாள்கள் நீடித்த இந்த வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் அஞ்சல் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. 
அதைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகளிடம் மத்திய அரசு பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட்டு ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர். பின்னர் இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. 
அதில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணி நிரந்தரம் குறித்து ஏதும் அறிவிக்கப்படவில்லை. ஊதிய உயர்வின்படி கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் அதிகபட்சமாக மாதந்தேறும் ரூ 14,500 ஊதியம் பெறுவார்கள். பணி செய்யும் நேரத்தை கணக்கிட்டு ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஊதிய உயர்வு முன்தேதியிட்டு நிலுவைத்தொகையாக வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.  அதன்படி ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை என்பது கடந்த 1.1.2016 முதல் கணக்கிடப்பட்டு அத் தொகை முழுவதையும் ஒரே தவணையில் வழங்கவும் அஞ்சல்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது என்றார். 
அதன்படி இனி ஊதியம் பெறக்கூடிய மாதங்களில் இந்த நிலுவைத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.