காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் நடைபெற்றுவரும் கம்பன் திருவிழா - முத்து விழா நிகழ்ச்சியில் வியாழக்கிழமை இரவு கவியரங்கம் நடைபெற்றது.
காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வரும் இவ்விழாவில் மாலையில் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் "சிகரங்களைத் தொட்ட கம்பன்' என்ற தலைப்பில் பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரம் தனியுரையாற்றினார். முன்னதாக மதுரை பாத்திமா கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் எம்.ஏ. சுசீலா எழுதி கோவை விஜய பதிப்பகம் பதிப்பித்த "கம்பன் தொட்ட சிகரங்கள்' என்ற நூலை தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் பிரமீளா குருமூர்த்தி வெளியிட, கம்பன் அடிப்பொடியின் பேரன் ச. கண்ணன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் "கம்ப உறவினர்கள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு புதுக்கோட்டை கவிஞர் கவிதைப்பித்தன் தலைமை வகித்து கவி பாடினார். இதில் மாமன்! என்ற பொருளில் கவிஞர் வல்லம் தாஜ்பால், தம்பி! என்ற பொருளில் கவிஞர் தஞ்சை இனியன், தங்கை! என்ற பொருளில் கவிஞர் வீ.ம. இளங்கோவன், தோழன்! என்ற பொருளில் கவிஞர் வீ.கே. கஸ்தூரிநாதன், மகன் என்ற பொருளில் கவிஞர் சொ.அருணன் ஆகியோர் கவி பாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சிக்கு அதிமுக ஆட்சியில் கிடைத்தது, திமுக ஆட்சியால் நிறுத்தப்பட்டதை பட்டியலிட்டாா் எடப்பாடி பழனிசாமி

உப்பு சத்தியாகிரக யாத்திரை 96-ஆவது ஆண்டு விழா! நினைவு ஸ்தூபிக்கு மரியாதை!

முற்போக்கான இந்தியாவை கட்டமைக்க அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்குவோம்: குடியரசுத் தலைவா்

முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

