ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

காரைக்குடி கம்பன் திருவிழாவில் கவியரங்கம்

காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் நடைபெற்றுவரும் கம்பன் திருவிழா -  முத்து விழா நிகழ்ச்சியில் வியாழக்கிழமை இரவு கவியரங்கம் நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 8:03 pm

காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் நடைபெற்றுவரும் கம்பன் திருவிழா -  முத்து விழா நிகழ்ச்சியில் வியாழக்கிழமை இரவு கவியரங்கம் நடைபெற்றது.
 காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வரும் இவ்விழாவில் மாலையில் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் "சிகரங்களைத்  தொட்ட கம்பன்' என்ற தலைப்பில் பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரம் தனியுரையாற்றினார்.  முன்னதாக மதுரை பாத்திமா கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் எம்.ஏ. சுசீலா எழுதி கோவை விஜய பதிப்பகம் பதிப்பித்த "கம்பன் தொட்ட சிகரங்கள்' என்ற நூலை தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் பிரமீளா குருமூர்த்தி வெளியிட,  கம்பன் அடிப்பொடியின் பேரன் ச. கண்ணன் பெற்றுக் கொண்டார்.
 பின்னர் "கம்ப உறவினர்கள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு புதுக்கோட்டை கவிஞர் கவிதைப்பித்தன் தலைமை வகித்து கவி பாடினார். இதில் மாமன்! என்ற பொருளில் கவிஞர் வல்லம் தாஜ்பால், தம்பி! என்ற பொருளில் கவிஞர் தஞ்சை இனியன், தங்கை! என்ற பொருளில் கவிஞர் வீ.ம. இளங்கோவன், தோழன்! என்ற பொருளில் கவிஞர் வீ.கே. கஸ்தூரிநாதன், மகன் என்ற பொருளில் கவிஞர் சொ.அருணன் ஆகியோர் கவி பாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.