மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முனியப்ப சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனியப்ப சுவாமி கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண்டலாபிஷேக

Updated On :14 மே 2018, 6:58 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனியப்ப சுவாமி கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண்டலாபிஷேக விழாவும், திங்கள்கிழமை கிடா வெட்டு படையல் வழிபாடும் நடைபெற்றது.
இக் கோயிலில் 48 நாள்களுக்கு முன் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில், கலசங்களில் நீர் நிரப்பி யாகம் வளர்க்கப்பட்டது. அதன்பின்னர், பூர்ணாஹூதி முடிந்து சூலாயுத வடிவிலான முனியப்ப சுவாமிக்கு கலசநீரால் அபிஷேகம் நடத்தி, அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இவ் விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோயிலில் கிடா வெட்டி சுவாமிக்கு படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மதியம், கோயிலில் அசைவ அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.