இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

முனியப்ப சுவாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனியப்ப சுவாமி கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண்டலாபிஷேக

News image
Updated On :14 மே 2018, 6:58 pm

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனியப்ப சுவாமி கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண்டலாபிஷேக விழாவும், திங்கள்கிழமை கிடா வெட்டு படையல் வழிபாடும் நடைபெற்றது.
இக் கோயிலில் 48 நாள்களுக்கு முன் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில், கலசங்களில் நீர் நிரப்பி யாகம் வளர்க்கப்பட்டது. அதன்பின்னர், பூர்ணாஹூதி முடிந்து சூலாயுத வடிவிலான முனியப்ப சுவாமிக்கு கலசநீரால் அபிஷேகம் நடத்தி, அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இவ் விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோயிலில் கிடா வெட்டி சுவாமிக்கு படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மதியம், கோயிலில் அசைவ அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.