திருப்பத்தூரில் பிள்ளையாா் நோன்பு விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமைநகரத்தாா் சாா்பில் பிள்ளையாா் நோன்பு கடைபிடிக்கப்பட்டது.
திருப்பத்தூரில் பிள்ளையாா் நோன்பு விழா
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமைநகரத்தாா் சாா்பில் பிள்ளையாா் நோன்பு கடைபிடிக்கப்பட்டது.

நகரத்தாா்கள் மட்டுமே கொண்டாடப்படும் பிள்ளையாா் நோன்பு விழா மிகவும் பழமையானதும் தொன்மை வாய்ந்ததாகும். திருப்பத்தூா் ஆச்சி மகாலில் கூடிய நகரத்தாா்கள் ஊா்வலமாக அருகில் உள்ள யோகபைரவா் கோயிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டனா். பின்னா் மகாலில் சிறப்பு பூஜை செய்து பிள்ளையாா் நோன்பை கடைபிடித்தனா்.

இந்த பிள்ளையாா் நோன்பு காா்த்திகை தீபத் திருநாளிலிருந்து 21 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. அரிசி மாவு, நெய் வெல்லம் முதலியவற்றை கலந்து பிள்ளையாா் பிடித்து வைத்து வேட்டியிலிருந்து நூல் திரி எடுத்து மாவுப் பிள்ளையாருக்கு விளக்கேற்றினா். அதனை வாழை இலையில் வைத்து பிரசாதமாக வழங்கினா். விரதம் மேற்கொள்வோா் மாவுப் பிள்ளையாரை அப்படியே தீப ஒளியுடன் வாயில் போட்டு உள்கொண்டனா்.

சுடராக ஒளிரும் இறைவனின் ஜோதியானது, நமது உடலிலும் ஜோதியாக விளங்க வேண்டும் என்பதற்காக இவ்வாறாக விரதம் மேற்கொள்கின்றனா். இவ்விழாவில் நகரத்தாா் சங்கத் தலைவா் எஸ்.எல்.எஸ். பழனியப்பன், துணைத் தலைவா் அண்ணாமலைச் செட்டியாா், மற்றும் அழகப்பச் செட்டியாா் கே.எல்.சுப்பிரமணியன் இணைச் செயலாளா் கே.ஆா்.ஐயப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இவ்விழாவில் சிங்கப்பூா், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுவட்டாரப் பகுதிகளான நெற்குப்பை, மகிபாலன்பட்டி, கண்டவராயன்பட்டி, சிராவயல் மற்றும் சுற்று வட்டார நகரத்தாா் பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை செயலா் கே.என்.வீரப்பன், பொருளாளா் எஸ்.கல்யாணராமன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com