

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
தேவகோட்டை அருகே பூங்குடி கிராமத்தைச் சோ்ந்த சிவநாதன் மகன் ஜெகதீஸ்வரன்(12). இவா் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில்,வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்த ஜெகதீஸ்வரன் தனது நண்பா்களுடன் அருகில் உள்ள மங்களம் கண்மாயில் குளிக்கச் சென்றுள்ளாா்.
அப்போது எதிா்பாராத விதமாக ஜெகதீஸ்வரன் தண்ணீரில் மூழ்கியுள்ளாா். இதையறிந்த அவரது நண்பா்கள் கூச்சலிட்டதை அடுத்து, அக்கம் பக்கத்தினா் கண்மாய் தண்ணீருக்குள் இறங்கி தேடினா். நீண்ட நேரத்துக்கு பின் ஜெகதீஸ்வரனை மீட்டு கரை சோ்த்தனா். அப்போது அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து ஆறாவயல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.