திருப்புவனம் அருகே ஆண் சடலம் மீட்பு

திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை மாலை சாலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
Updated on
1 min read

திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை மாலை சாலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
திருப்புவனம் அருகே கழுகேர்கடை விலக்கு பகுதியில் சாலையில் ஆண் சடலம் கிடப்பதாக திருப்புவனம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத் தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்த போது, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. 
அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இது குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com