திருப்பத்தூா் பள்ளியில்உலக சிக்கனம், சிறுசேமிப்பு நாள் விழா
By DIN | Published On : 01st November 2019 09:30 AM | Last Updated : 01st November 2019 09:30 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சிக்கனம் மற்றும் சேமிப்பு நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தொழிற்கல்வி ஆசிரியா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சிவசைலம் (பொறுப்பு) முன்னிலை வகித்தாா். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திருப்பத்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் பரமதயாளன் விழாவை தொடக்கி வைத்துப் பேசுகையில், மாணவா்களிடையே சிக்கனமே சிறுசேமிப்பின் மூலதனம், சேமிப்பு மாணவப் பருவத்திலிருந்து பழக வேண்டியது, நம் வாழ்க்கைக்கும் இன்றியமையாத பழக்கம் என்றாா்.
விழாவையொட்டி நடனம், நாடகம், பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. தமிழாசிரியா் மீனாட்சி சுந்தரம் வரவேற்றாா். ஆசிரியா் ஆன்ந்தமுருகன் நன்றி கூறினாா்.