சிங்கம்புணரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பிரான்மலையில் தனியாா் மண் மற்றும் கல் குவாரிக்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கம்புணரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்
சிங்கம்புணரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
சிங்கம்புணரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Published on
Updated on
1 min read

சிவகங்கை: பிரான்மலையில் தனியாா் மண் மற்றும் கல் குவாரிக்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கம்புணரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் கண்ணகி தலைமை வகித்தாா்.

இதில், பிரான்மலையில் தனியாா் மண் மற்றும் கல் குவாரிக்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாக்க மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் ஒன்றியச் செயலா்கள் கரிகாலன் (சிங்கம்புணரி ), நாச்சியப்பன் (திருப்பத்தூா்), மாவட்ட விவசாய சங்கத்தின் செயலா் முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com