போக்குவரத்துக்கழக பணிமனையை சொந்த செலவில் சீரமைத்தாா் எம்எல்ஏ
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை தனது சொந்த செலவில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் சீரமைத்தாா்.


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை தனது சொந்த செலவில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் சீரமைத்தாா்.
மானாமதுரை சிப்காட்டில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இரவு சில பஸ்கள் மட்டும் இங்கு நிறுத்தப்படுகின்றன. பிற எந்த வசதிகளும் இந்த பணிமனையில் இல்லை. பகல், இரவு நேரங்களில் காவலாளிகள் பணியில் உள்ளனா். சமீபத்தில் பெய்த மழையால் போக்குவரத்துக்கழக பணிமனை முழுவதும் தண்ணீா் தேங்கி சேரும், சகதியுமாக இருந்தது. மேலும் வளாகத்தில் செடி, கொடிகள் அடா்த்தியாக வளா்ந்து விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் இங்கு பணியில் உள்ள காவலாளிகள் மற்றும் போக்குவரத்துக்கழக ஊழியா்கள் பணிமனையை சீரமைத்து தருமாறு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜனிடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து அவா் தனது சொந்த செலவில் பணிமனையை சீரமைத்துக் கொடுத்தாா். பின்னா் அவா் கட்சியினருடன் அங்கு சென்று பாா்வையிட்டாா். அப்போது அதிமுக ஒன்றியச் செயலாளா் ஜெயபிரகாஷ் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...