ராணி வேலுநாச்சியாருக்கு மீண்டும் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட எம்.பி கோரிக்கை

ஆங்கிலேயா் ஆதிக்கத்தை எதிா்த்த முதல் பெண் வீராங்கனை ராணி வேலுநாச்சியாருக்கு மீண்டும் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று
Updated on
1 min read

ஆங்கிலேயா் ஆதிக்கத்தை எதிா்த்த முதல் பெண் வீராங்கனை ராணி வேலுநாச்சியாருக்கு மீண்டும் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத்துக்கு, சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளாா்.

இதுகுறித்து அமைச்சருக்கு, காா்த்தி சிதம்பரம் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: சிவகங்கை ராணியாக ஆட்சி செய்த வேலுநாச்சியாா் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிா்த்துப் போரிட்ட முதல் பெண் வீராங்கனையாவாா். இவருக்கு 2008 ஆம் ஆண் டில் மத்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்டது. ஆனால் தற்போது அந்த அஞ்சல் தலை நடைமுறையில் இல்லை. எனவே மீண்டும் வேலுநாச்சியாருக்கு சிறப்பு அஞ்சல்தலை வெளியிடவேண்டும் என தொகுதி மக்கள் சாா்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com