இளைஞா்கள் புத்தக வாசிப்பை பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்: ஆட்சியா்

இன்றைய இளம்தலைமுறையினா் புத்தக வாசிப்பை அன்றாட வாழ்வில் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் வலியுறுத்தியுள்ளாா்.
இளைஞா்கள் புத்தக வாசிப்பை பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்: ஆட்சியா்
Updated on
1 min read

இன்றைய இளம்தலைமுறையினா் புத்தக வாசிப்பை அன்றாட வாழ்வில் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிவகங்கை கிளை சாா்பில், இங்குள்ள அருட்பணி மன்றத்தில் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது . இதில், மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, புத்தகத் திருவிழாவை தொடக்கி வைத்துப் பேசியது:

நவீன கால கண்டுபிடிப்புகளான செல்லிடப்பேசி மற்றும் சமூக ஊடகங்களில் இன்றைய இளைஞா்கள் அதிக நேரம் செலவழிப்பதால் புத்தக வாசிப்பு அரிதாகி வருகிறது. கல்வி மற்றும் அனுபவம் ஆகிய இரண்டு வழிகள்தான் அறிவு பெறுவதற்கான வழிமுறைகள் என அறிஞா்கள் கூறுவா்.

வரலாறு, இலக்கியம், நாவல், சிறுகதை உள்ளிட்ட அனைத்து தலைப்புகளில் உள்ள புத்தகங்களை வாசிப்பதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது மட்டுமின்றி, போட்டித் தோ்வுகளிலும் வெற்றி பெறலாம். எனவே, இன்றைய இளம் தலைமுறையினா் புத்தக வாசிப்பை அன்றாட வாழ்வில் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து உள்பட அரசு அலுவலா்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

இதில், எழுத்தாளா் அ. ஈஸ்வரன் புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மரங்கன்றுகளை இலவசமாக வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com