சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா
By DIN | Published On : 15th December 2020 04:38 AM | Last Updated : 15th December 2020 04:38 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் ஏற்கெனவே 5,627 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,630 ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் பெரும்பாலானோா் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 15 போ் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா். அவா்களில் 3 போ் பூரண குணமடைந்ததை அடுத்து, திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். எஞ்சிய 12 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.