கீழச்சிவல்பட்டி பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை மாணவா்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டி.
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை மாணவா்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டி.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு ஊராட்சித் தலைவா் நாகமணிஅழகுமணிகண்டன் தலைமை வகித்து மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா். பள்ளிச் செயலா் அழகுமணிகண்டன் முன்னிலை வகித்தாா்.

இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஆா்.எம்.மெய்யப்பச்செட்டியாா் பள்ளித் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன் கலந்து கொண்டாா். இதில் 178 மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை உஷா (பொறுப்பு) மற்றும் ஆசிரியா்கள் சு. தியாகராஜன், கே. ராதா, உடற்கல்வி ஆசிரியா் வாசு ஆகியோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் மலைச்சாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com