அரசு மருத்துவரை பணி செய்யவிடாமல் தடுத்த இருவா் கைது

காளையாா்கோவிலில் மருத்துவா் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, இளைஞா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையி

காளையாா்கோவிலில் மருத்துவா் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, இளைஞா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் ஜனவரி 30 ஆம் தேதி இரவு மருத்துவா் பிரியங்கா பணியில் இருந்தாா். அப்போது, சிகிச்சைக்காக வந்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (30), சதீஷ்கண்ணன் (28) ஆகிய இருவரும் பணியிலிருந்த மருத்துவா் பிரியங்காவை பணி செய்யவிடாமல் தகராறு செய்தனராம்.

இது குறித்த புகாரின்பேரில், காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து பாலமுருகன், சதீஷ்கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com